உடல் உஷ்ணப் பிரச்சனைக்கு ஒரே தடவையில் நிவாரணம் கொடுக்கும் பார்லி கஞ்சி- 1 கப் குடிங்க
அரிசி, கோதுமை அறிமுகமானவதற்கு முன்னர் முழுமையான தானிய உணவாக இருந்தது தான் பார்லி.
சுமாராக 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தி வரும் ஒரு 1000 ஆண்டு பழைமையான ஆற்றல்மிக்க தானியம் இதுவாகும். “பார்லி ரொட்டியும், மோரும் சாப்பிடுபவர்களுக்கு எந்த நோயும் வராது..” என்பது பார்சிய நாட்டின் பழைய பழமொழியாக பார்க்கப்படுகிறது.
100 கிராம் பார்லியில் 350 கலோரி இருப்பதால் இது மற்ற உணவுகளை விட பலமிக்க உணவாக கருதப்பட்டது. இதனால் எகிப்து நாட்டில் பிரமிட் கட்டிய தொழிலாளர்களுக்கு முக்கிய உணவாக கொடுக்கப்பட்டுள்ளது.
அப்போது பார்லி தண்ணீரும், தேனும் மூச்சிரைப்பு நோய்க்கு மருந்தாக கொடுக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதே போன்று தொற்று நோய்களுக்கும், புற்றுநோய்களுக்கும், உடற்புண்களுக்கும், காயங்களுக்கும் மற்றும் குடல் நோய்களுக்கும் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
மற்ற தானியங்களை சமைக்கும் பொழுது கொஞ்சமாக நார்ச்சத்து குறையும். ஆனால் பார்லியில் உள்ள “பீட்டோ குளூக்கான்” என்ற நார்ச்சத்து எந்த வகையான தயாரிப்பு முறையிலும் அழியாமல் முழு பலனை தரும்.
இவ்வளவு ஆரோக்கிய பலன்களை வைத்திருக்கும் பார்லியை வைத்து எப்படி கஞ்சி தயாரிக்கலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பார்லி அரிசி - 1 கப்
- மிளகு - 1/2 டீஸ்பூன்
- சீரகம் - 1/2 டீஸ்பூன்
- வெண்ணெய் - 1 டீஸ்பூன்
- பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
- இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது)
- வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
- கேரட் - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
- பீன்ஸ் - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
- தண்ணீர் - 4 டம்ளர்
- உப்பு - சுவைக்கேற்ப
- பார்லி அரிசி பவுடர் - 4 ஸ்பூன்
- கொத்தமல்லி - சிறிது
கஞ்சி தயாரிப்பது எப்படி?
முதலில் பார்லியை ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து, 2 நிமிடம் வறுக்கவும். அதில் மிளகு மற்றும் சீரகம் சேர்த்து 1 நிமிடம் வறுத்து குளிர வைக்கவும்.
அதன் பின்னர், சுத்தமான மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு பொடித்து தனியாக வைக்கவும்.
அடுத்து, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து சூடானதும், அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதங்க விடவும். அதனுடன் வெங்காயம், கேரட், பீன்ஸ் ஆகிய காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.
அதில் 4 டம்ளர் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும், அதில் 4 ஸ்பூன் பார்லி அரிசி பவுடர் சேர்த்து கட்டிகளின்றி கிளறி விடவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்தமல்லித் தூவி கிளறினால் சுவையான பார்லி கஞ்சி தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |