உங்க பர்ஸில் இது இருந்தா உடனே தூக்கி வீசுங்க... பேராபத்து! துளி கூட பணம் சேராது
பணத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றது.
இந்த பணத்தை சம்பாதிக்க நாம் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். என்ன தான் உழைத்தாலும் தேவையில்லாமல் செலவுகள் எம்மில் பலருக்கு வந்து கொண்டிருக்கும்.
நாம் சம்பாதிக்கும் பணம் பர்ஸில் நிலைத்திருக்க கடின உழைப்பு அவசியம். வாஸ்துப்படி பர்ஸில் தேவையற்ற பொருட்கள் இருந்தால், அது எப்போதும் பணப் பிரச்சனையை உண்டாக்கும்.
அது என்ன என்பதைக் காண்போம்.
முடி உதிர்வை தடுத்து கிடுகிடுவென வளர உதவும் கருஞ்சீரகம்.. எப்படி யூஸ் பண்ணலாம்?
இறந்தவர்களின் புகைப்படங்கள்
இறந்தவர்களின் புகைப்படங்களை எப்போதும் பர்ஸில் வைத்திருக்கக்கூடாது.
ஆனால் பலர் இறந்தவர்களுடனான ஆழமான தொடர்பின் காரணமாக தங்களுடன் அவர்கள் எப்போதும் இருக்க வேண்டுமென்று தங்கள் பர்ஸில் வைத்திருப்பார்கள்.

இப்படி வைத்திருப்பது நல்லதல்ல. வாஸ்துப்படி, பர்ஸ் லட்சுமி தேவி குடியிருக்கும் இடமாக கருதப்படுகிறது.
எனவே அவ்விடத்தில் இறந்தவர்களின் புகைப்படங்களை வைப்பது வாஸ்து குறைபாடாகி, பணப் பிரச்சனையை ஏற்படுத்தும்.
அது மட்டும் இறந்தவர்களின் கிழிந்த புகைப்படங்களையும் வைத்திருப்பது நல்லது அல்ல. அதனால் உடனே அதனை அப்புறப்படுத்தி விடுங்கள்.
கடவுளின் புகைப்படங்கள்
பலர் கடவுளின் புகைப்படங்களை தங்களுடன் வைத்திருப்பதை சுபமாக கருதலாம்.

ஆனால் கடவுளின் புகைப்படங்களை பர்ஸில் வைத்திருக்காதீர்கள். அவ்வாறு வைத்திருந்தால், கடன் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
சனி அமாவாசையுடன் ஆண்டின் முதல் சூர்ய கிரகணம்! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்