அவர்களின் நாகரீகம் இதுதானா? மரியாதைக்கு கூட என்னிடம் கேட்பதில்லை; கவிஞர் வைரமுத்துவின் வைரல் பதிவு!
தனது பாடல் வரிகளின் பல்லவிகளை தமிழ் சினிமா படத் தலைப்புகளாகப் பயன்படுத்திய போதும் அதற்கு தன்னிடம் அனுமதி பெறவில்லை என்றும் கவிஞர் வைரமுத்து குற்றம் சாட்டியுள்ளார் குறித்த விடயம் தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

அட இது புதுசா இருக்கே! இயக்குநர் விக்னேஷ் சிவன் குடும்பத்துடன் போன ட்ரெண்டிங் ride... எதுலன்னு பாருங்க
வைரமுத்துவின் பதிவு
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்பட தலைப்புகள், பாடல் வரிகளை வைத்து வந்துள்ளன. அந்தவகையில், தனது வரிகளை பட தலைப்புகளாக வைத்தவர்கள் தன்னிடம் மரியாதைக்குக் கூட ஒரு வார்த்தை சொன்னதில்லை என பொன்மாலைப் பொழுது, கண் சிவந்தால் மண் சிவக்கும், இளைய நிலா, ஊரத் தெரிஞ்சுகிட்டேன், பனிவிழும் மலர்வனம், வெள்ளைப் புறா ஒன்று, பூவே பூச்சூட வா, ஈரமான ரோஜாவே, நிலாவத்தான் கையில புடிச்சேன், மெளன ராகம், மின்சாரக் கண்ணா, கண்ணாளனே, என்னவளே, உயிரே, சண்டக்கோழி, பூவெல்லாம் கேட்டுப் பார், தென்மேற்குப் பருவக்காற்று, விண்ணைத் தாண்டி வருவாயா, நீ தானே என் பொன் வசந்தம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், தங்கமகன் இப்படி இன்னும் பல...
சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக இவர்கள் யாரையும் நான் கடிந்து கொண்டதில்லை காணும் இடங்களில் கேட்டதுமில்லை செல்வம் பொதுவுடைமை ஆகாத சமூகத்தில் அறிவாவது பொதுவுடைமை ஆகிறதே என்று அகமகிழ்வேன்.
ஏன் என்னைக் கேட்காமல் செய்தீர்கள் என்று கேட்பது எனக்கு நாகரிகம் ஆகாது ஆனால் என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா? என கவிஞர் வைரமுத்து தனது 'எக்ஸ்' தளப் பக்கத்தில் ஆதங்கத்துடன் பதிவு செய்துள்ளார்.குறித்த பதிவு தற்போது இணையத்தில் புதிய புயலை கிளப்பி வருகின்றது.
சமீபத்தில் வெளியான அஜித்தின் குட் பேட் அக்லி, சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி உள்ளிட்ட பல படங்களில் பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாடல்களை பயன்படுத்தியதற்காக காப்புரிமை கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னுடைய
— வைரமுத்து (@Vairamuthu) June 9, 2025
பல்லவிகள் பலவற்றைத்
தமிழ்த் திரையுலகம்
படத் தலைப்புகளாகப்
பயன்படுத்தி இருக்கிறது
அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும்
என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு
மரியாதைக்குக்கூட
ஒரு வார்த்தையும் கேட்டதில்லை
ஒன்றா இரண்டா...
பொன்மாலைப் பொழுது,
கண் சிவந்தால் மண் சிவக்கும்,
இளைய நிலா,…
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |