பிரியாணிக்கு பின் தர்பூசணி சாப்பிடலாமா? விஷமான சம்பவம் குறித்து மருத்துவர் விளக்கம்
சமீபத்தில் மும்பையில் பிரியாணி மற்றும் தர்பூசணி சாப்பிட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இந்த எதிர்பாராத துயர சம்பவம் குறித்து இணையத்தில் அதிகம் பேசப்பட்டது.
அதனை தொடர்ந்து பெரும்பாலான செய்தி தளங்களில் தர்பூசணி பழத்தை பிரியாணி சாப்பிட்டவுடன் சாப்பிட்டமையே குறித்த உயிரிழப்புக்கு காரணம் என்ற வகையில் பல்வேறு தகவல்கள் பரவ ஆரம்பித்தது.

அதன் பின்னணியில் இருக்கும் உண்மை காரணம் குறித்து மருத்துவ நிபுணர் அருண்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் குறிப்பிடுகையில், இந்த உயிரிழப்புகள் உணவு நச்சுத்தன்மையால் ஏற்பட்டது அல்ல. தடயவியல் மற்றும் காவல்துறை விசாரணையில், அவர்கள் உட்கொண்ட தர்பூசணியில் எலி மருந்து (Zinc phosphide) கலந்திருந்தது தெரியவந்தது.

இது திட்டமிட்ட கொலையா அல்லது தற்செயலான விபத்தா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே இரண்டு உணவுகளை சேர்த்து சாப்பிடுவதால் ஒருபோதும் இவ்வாறான ஆபத்து நிகழாது என விளக்கம் கொடுத்துள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |