த்ரிஷா வெளியிட்ட அடுத்த இன்ஸ்டா பதிவு... வதந்திக்கு மத்தியில் இவ்வளவு சந்தோஷமா?
நடிகர் விஜய்யுடன் என்னதான் சர்ச்சையான கருத்துக்கள் வந்தாலும் திரிஷா தனது வேலையப் பார்த்துக்கொண்டு, மிகவும் ஜாலியாக இருந்து வருகின்றார்.
நடிகர் விஜய், த்ரிஷா
பிரபல நடிகரும், அரசியல்கட்சி தலைவருமான நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.
இவர் தனது விவாகரத்து புகாரில் விஜய் வேறொரு நடிகையுடன் வாழ்ந்து வருவதாகவும், தன்னை மனதளவில் கஷ்டப்படுத்தியுள்ளதாகவும், அவரது வீட்டில் இருப்பதற்கு தங்களை அனுமதிக்கவில்லை என்று பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

இதற்கு எந்தவொரு பதில் அளிக்காத விஜய் திடீரென திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு நடிகை த்ரிஷாவுடன் வந்து அதிர்ச்சியடைய வைத்தார்.
இந்த காணொளி இணையத்தில் வைரலானதையடுத்து, கட்சியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பல கேள்விகள் எழுந்த நிலையில், இதற்கு விஜய் மறைமுகமாக பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

கண்டுகொள்ளாத த்ரிஷா
இதற்கிடையில் பார்த்திபன் த்ரிஷாவை ஜாடையாக பேசி காணொளியினை வெளியிட்ட நிலையில், இதற்கும் த்ரிஷா மிகவும் கூலாக புகைப்படம் வெளியிட்டு அதனை பதிலாக்கினார்.
இவர்களின் இருவரின் போஸ்ட் வைரலாகி வந்த நிலையில், த்ரிஷாவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு எந்தவொரு பதிலும் அளிக்காமல் விமானநிலையத்திற்கு வேகமாக சென்றுள்ளார். இவை பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில், த்ரிஷா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.

இதற்கிடையில் த்ரிஷா தனது இன்ஸ்டாகிராமில் நண்பர்களுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் மீண்டும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தன்னை பற்றி எவ்வளவு வதந்திகள் வந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் தன் வாழ்க்கையை ஜாலியாக அனுபவித்து வருகின்றேன் என்பதை புகைப்படத்தை வெளியிட்டு காட்டியுள்ளார் என்று கூறுகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |