Trisha : த்ரிஷா - ராணா காதல் முறிவுக்கும் இது தான் காரணமாம்! வைரலாகும் தகவல்
நடிகை த்ரிஷா மற்றும் பிரபல நடிகர் ராணா டகுபதி ஒரு காலகட்டத்தில் காதலித்தார்கள் என்பது அனைவரும் அறிந்தது தான்.இவர்களின் காதல் முறிவுக்கான காரணம் தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகியுள்ளது.
நடிகை த்ரிஷா
விஜய் - சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் இணையத்தில் அதிகம் தேடப்படும் நடிகையாக த்ரிஷா மாறியிருக்கின்றார்.

அதற்கு முக்கிய காரணம், தவெக கட்சித்தலைவரும் நடிருமாக விஜயிடமிருந்து விவாகரத்து வேண்டும் என விஜய் மனைவி சமீபத்தில் தாக்கல் செய்த மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறியிருந்தார்.
சங்கீதா குறிப்பிட்ட நடிகை த்ரிஷா தான் என்ற ரசிகர்கள் மத்திலும் இருந்த நிலையில், அதனை மெய்பிக்கும் வகையில், விஜய் திரிஷாவுடன் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு ஒரே நிறத்தில் ஆடை அணிந்து ஒரே காரில் வந்தமையால் இணையத்தில் குறித்த விடயம் மிகப்பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இதனால் த்ரிஷா- விஜய் குறித்து ரசிகர்கள் உட்பட சினிமா பிரபலங்கள், அரசியல் வாதிகள் என பலரும் விமர்ச்சித்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, த்ரிஷாவின் காதல் வாழ்க்கை குறித்து இணையத்தில் அதிகம் தேடப்பட்டு வருகின்றது.

த்ரிஷா- ராணா காதல் முறிவு
இந்நிலையில், த்ரிஷா தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடித்தபோது ராணா டகுபதியை காதலித்ததாக பரவலாக பேசப்பட்டது.
ஆனால் அந்த காதலும் பாதியில் முறிந்ததாக கூறப்படுகிறது. அதாவது, ராணா டகுபதி ராமநாயுடு குடும்பத்தை சேர்ந்தவர். இவர்கள் ரொம்பவே செல்வாக்கு மிகுந்த குடும்பம்.

இவரது சித்தப்பாதான் வெங்கடேஷ். நாகார்ஜுனா குடும்பம், ராணா குடும்பத்தினர் உறவினர்களாம். இந்த பரம்பரையை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் மிகவும் ஒற்றுமையாக இருப்பார்களாம்.
குறிப்பாக திருமணம் என்றால் தங்களது சொந்தத்துக்குள் மட்டுமே நடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்களாம். நாகார்ஜுனா குடும்பம் முதலில் சமந்தாவைக் கூடஏற்றுக்கொள்ளவில்லையாம். ஆனால் நாக சைதன்யா பிடிவாதமாக நின்றதால் தான் திருமணம் செய்து வைத்தார்களாம்.

குடும்ப பாரம்பரியம் காரணமாக த்ரிஷாவுடன் ராணாவுக்கு காதல் ஏற்பட்டதை ராணா குடும்பத்தினர் சுத்தமாக விரும்பவில்லையாம். அதனால்தான் அவர்கள் காதலை ஆரம்பத்திலேயே முறித்துவிட்டார்கள் என பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் பகிர்ந்த விடயம் தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகியுள்து.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |