இந்தியாவில் அதிக கடன் வாங்கியுள்ள மாநிலம் இதுதானாம்.. தமிழ்நாட்டின் கடன் தொகை எவ்வளவு?
இந்தியா பல்வேறு மாநிலங்களில் ஒன்றிணைந்த ஒன்றியமாகும். மாநிலங்களின் கூட்டமைப்பாக இருப்பதால், இந்தியா அதன் மாநிலங்கள் தங்கள் நிதித் தேவைகளை நிறைவு செய்துக் கொள்வதற்காக பல வழிகளில் பணம் திரட்டி வருகிறது.
அதில் குறிப்பாக கடன் வாங்குவது மாநில வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. அதிகமாக கடன் வாங்குவது அந்த மாநிலத்தின் பொருளாதாரத்தையும் அதன் ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிக்கிறது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்கட்டமைப்பு மற்றும் சமூக நலத் திட்டங்களுக்குச் செலவிடுவது முதல் நிதித் தவறான மேலாண்மை வரை அனைத்து தேவைகளிலும் கடன் சுமை தாக்கம் செலுத்துகிறது.
அந்த வகையில், இந்தியாவில் அதிக கடன் வாங்கும் மாநிலம் எது? தமிழ்நாட்டிற்கு எவ்வளவு கடன் உள்ளது? என்பதையும் பதிவில் பார்க்கலாம்.
மகாராஷ்டிரா | இந்திய மாநிலங்களில் அதிக வருமானம் ஈட்டும் மாநிலமாக மகாராஷ்டிரா பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த மாநிலத்திற்கு தான் அதிகமாக கடன் இருப்பதாக கூறப்படுகிறது. அறிக்கைகளின்படி, மகாராஷ்டிராவின் தற்போதைய கடன் ₹7 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. மும்பை மெட்ரோ, கடலோர சாலைத் திட்டங்கள் மற்றும் தொழில்துறை மண்டலங்களில் முதலீடுகள் போன்ற மெகா-உள்கட்டமைப்புத் திட்டங்களால் மாநிலத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளது. அதிக கடன் இருந்த போதிலும், மகாராஷ்டிரா ஜிஎஸ்டி, கலால் வரி மற்றும் பிற வரிகள் மூலம் வருமானம் வருகின்றது. |
உத்தரப் பிரதேசம் | இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தின் வருமானம், அதன் கடன் தொகையிலும் குறைவாக உள்ளது. உத்திர பிரதேசத்திற்கு சுமார் ₹6.5 லட்சம் கோடி கடன் உள்ளதாக கூறப்படுகிறது. அதிக மக்கள் தொகை இருப்பதால் சுகாதாரம், கல்வி மற்றும் நலத்திட்டங்களுக்கு நிறைய செலவுகள் உள்ளன. விவசாயக் கடன் தள்ளுபடிகள் மற்றும் பொது உள்கட்டமைப்பு விரிவாக்கத் திட்டங்கள் கடன் அளவை அதிகமாக்கியுள்ளது. வருமானத்திற்காக மாநிலம் போராடி வருகிறது. |
மேற்கு வங்கம் | மேற்கு வங்கம் சுதந்திரம் பெற்ற காலம் முதல் அதிக கடன் சுமை இருந்து வருகிறது. தற்போதைய கடன்கள் ₹5.5 லட்சம் கோடியை நெருங்கியுள்ளதால் நிதி மேலாண்மையில் மாற்றங்கள் மற்றும் குறைந்த வருவாய் ஈட்டல் ஆகியவை கடன்களை செலுத்துவதில் தடையாக உள்ளது. கடனைத் திருப்பி செலுத்தும் செயல்முறை, மானியங்களுக்கான அரசாங்க செலவுகள் மற்றும் “கன்யாஸ்ரீ“ மற்றும் “ரூபஸ்ரீ” திட்டங்கள் போன்ற சமூகத் திட்டங்களும் அதன் நிதிச் சுமையை குறைத்து வருகிறது. |
தமிழ்நாடு | தமிழ்நாட்டின் கடன் தொகை சுமார் ₹5.7 லட்சம் கோடி இருக்கும். இந்தியாவின் அதிகபட்ச கடன்களில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதிகரித்து வரும் புதிய கடன், நலத்திட்டங்களுக்கான அதிக செலவு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குதல் மற்றும் பொதுப் போக்குவரத்திற்கு வழங்கப்படும் பிற கட்டணங்கள் ஆகியவற்றால் கடன் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. தமிழ்நாடு தொழில் துறையில் மாபெரும் சக்தியாக விளங்குவதால் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உள்ளது. வருமானத்தை விட செலவுகளே அதிகமாக உள்ளது. |

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா?
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |