பல் துலக்கும் போது ஏற்பட்ட பரிதாபம்! அறுவை சிகிச்சை வரை சென்று அவதிப்பட்ட பெண்
பல் துலக்கும்போது கீழே விழுந்த பெண் வாயின் இடுக்குகளில் டூத்பிரஸ் வசமாக மாட்டிக்கொண்டதால் ஆப்ரேஷன் செய்து முகத்தின் வழியாக ரூத்பிரஸை சாமர்த்தியமாக செயல்பட்டு மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
தமிழகத்தில் காஞ்சிபுரம் எண்ணெய்காரத் தெருவைச் சேர்ந்த ரேவதி(34). இவர் நேற்று முன்தினம் காலையில் தனது குளியலறையில் டூத் பிரஸ் கொண்டு பல்துலக்கி கொண்டுள்ளார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக ரேவதி வழுக்கி கீழே விழுந்த நிலையில், இவர் வாயில் வைத்திருந்த பிரஷ் பற்களின் இடையே மாட்டிக்கொண்டுள்ளது.
இதனால் வாய் திறக்க முடியாமலும், மூட முடியாமலும் அவதிப்பட்ட அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் ஆலோசித்து, ரேவதியின் கன்னத்தின் வழியாக டூத் பிரஷை அகற்ற முடிவெடுத்தனர்.
பின்பு ரேவதிக்கு மயக்க மருந்து கொடுத்து முகத்தின் வெளிப்புறத்தில் காதுக்கு கீழே துளையிட்டு கன்னத்தில் வழியாக பிரஷை அகற்றியுள்ளனர்.
டூத் பிரஷ் சற்று ஆழமாக சென்றதால் மருத்துவர்கள் இதனை சவாலாக எடுத்துக்கொண்டு அறுவை சிகிச்சையில் வெற்றி கண்டுள்ளனர்.