நாவை கட்டிப் போடும் தக்காளி குழம்பு: ஈஸியான சண்டே ரெசிபி!
சண்டே வந்து விட்டால் வீட்டில் எல்லோரும் ஒன்று கூடி என்ன சமையல் செய்யலாம் என்று முதல்நாளோ யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
அப்படி இந்த சண்டே என்ன செய்யலாம் என்று யோசிப்பவர்கள் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.
தேவையான பொருட்கள்
- பெரிய வெங்காயம் – 1
- தக்காளி – 3
- பூண்டு – 10 பல்
- பச்சை மிளகாய் – 1
- மஞ்சள் தூள் – கால் கரண்டி
- மிளகாய் தூள் – 1 கரண்டி கரம்
- மசாலா தூள் – அரை கரண்டி
- தேங்காய் துருவல் – அரை கப்
- கடுகு – அரை கரண்டி
- சீரகம் – அரை கரண்டி
- கறிவேப்பிலை – 1கொத்து
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
- கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி
செய்முறை
முதலில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், 4 பல் பூண்டு சேர்த்து நன்றாக அரைத்து பாலாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாகியதும் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
அதன் பின் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளவும். பிறகு தக்காளி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும்.
அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் முன்னதாக அரைத்து எடுத்த கலவையையை சேர்த்து கொதிக்க விட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி கொத்தமல்லி தழைகளை தூவினால் சுவையான தக்காளி கொழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
