மஞ்சள் பொடியில் வண்டு, பூச்சி வராமல் ப்ரெஷா இருக்கணுமா? இதோ அருமையான டிப்ஸ்
மஞ்சள் பொடியில் வண்டு, புழுக்கள் வராமல் இருப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
இந்திய சமையலறையில் மிக முக்கியமான மசாலா பொருள் என்றால் மஞ்சள் ஆகும். மருத்துவ குணம் கொண்ட மஞ்சளில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றது.
உணவில் மட்டும் ஆயுர்வேத சிகிச்சையிலும் மஞ்சள் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் மஞ்சளை நீண்ட காலம் வைத்திருந்தால் பூச்சி, வண்டு வந்துவிடும். இவைகள் வராமல் இருப்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ்களை தெரிந்து கொள்வோம்.
இந்திய கலாச்சாரத்தில் புனிதமாக பார்க்கப்படும் மஞ்சள் மருத்துவ குண்ஙகளும் அடங்கியுள்ளது. குர்குமின் என்னும் ஆன்ட்டி ஆக்சிடன்ட் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் மஞ்சளில் அதிகமாகவே இருக்கின்றது.
புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மையைக் கொண்ட இதனை சரியான முறையில் சேமித்து வைக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அதன் நிறம் மற்றும் வீரியம் குறைந்துவிடுமாம்.
எவ்வாறு சேமிக்கலாம்?
மஞ்சள் பொடியை காற்று புகாத கண்ணாடி டப்பாவில் சேமித்து வைக்க வேண்டும். மேலும் ஈரம் இல்லாமலும் டப்பா இருக்க வேண்டும்.
நாம் அதனை எடுக்கும் போதும் ஈரமில்லாத ஸ்பூனை பயன்படுத்தி எடுக்கவும். அதாவது மஞ்சள் பொடி அதிகமாக இருந்தால், ஒரே பாட்டிலில் சேமித்து வைக்காமல் இரண்டு மூன்று பாட்டிலில் சேமித்து வைக்கவும்.
பச்சை மஞ்சள்
இதுவே பச்சை மஞ்சளை சேமிக்கும் போது, மண் இல்லாமல் நன்றாக தண்ணீரில் அலசி எடுத்துக் கொண்டு, ஈரம் இல்லாமல் நன்கு உலர்த்தவும்.
பின்பு அதை ஒரு பேப்பர் டவலில் சுற்றி பிறகு காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்க வேண்டும். காய்கறிகள் சேமிக்கும் இடத்தில் இந்த டப்பாவை வைத்து ஸ்டோர் செய்யுங்கள்.
சில நாட்களுக்குப் பிறகு அதை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி ஜிப் லாக் கவரில் போட்டு ஃப்ரீசரில் சேமிக்கலாம்.
முக்கியமாக மசாலா பொருட்களை சூரிய ஒளி படாத இடத்தில் வைக்க வேண்டும். ஏனெனில் புத்துணர்ச்சி இல்லாமல் போவதுடன் சீக்கிரம் கெட்டுப் போகவும் செய்துவிடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |