மூன்றெழுத்து இட்லி நடிகை வாழ்க்கையே கெடுத்துவிட்டார் - ஆவேசமாக கத்திய ரவி மோகன்
பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரவி மோகன் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் பல உண்மைகளை கூறியதோடு மூன்றெழுத்து இட்லி நடிகை வாழ்கையை கெடுத்துவிட்டார் என கூறி உள்ளார்.

ரவி மோகன்
நேற்று ரவிமோகனின் தோழி கெனிஷா காணொளி ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில் அவர் சென்னையை விட்டு வெளியேறப்போவதாகவும் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகப்போவதாகவும் மிகவும் எமோஷனலாக ஒரு காணொளி ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் ரவி மோகன் பத்திரிக்கையாளரிடம் கூறிய விடயங்கள் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அவர் பேசும் போது "சாதுவா இருந்த என்னை நிறைய பேர் சீண்டலாம் என நினைக்கிறார்கள்.

இத்தனை நாள் பேசாமல் இருந்ததே முட்டாள்தனம். விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்கப்போவதில்லை. 23 வருடம் இரவு பகலாக உழைத்துள்ளேன்.
என்னுடைய 90% படங்கள் வெற்றியடைந்துள்ளன. நான் எப்படி சூட்டிங் வர்றான் என பார்க்கிறான் என சொல்கிறார்கள். அவர்களே தயாரிப்பாளராக்கியதே நான் தான்.
எனக்கு நடந்தது மிகப்பெரிய அநியாயம். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை சுத்தம் செய்துவிட்டு மீண்டும் வருவேன். அதுவரை நான் நடிக்கப்போவதில்லை. என்னை அடிமையாக வைத்திருந்தார்கள்.
கையை அறுத்துக்கொண்டு என்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்தார்கள். மிரட்டி தான் என்னை திருமணம் செய்துகொண்டார். ஒருத்தர் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் உங்களுக்கே படம் பண்ணிக்கொண்டு இருக்க வேண்டும்.

வெளிப் படங்கள் பண்ணிக்கொண்டு இருக்க வேண்டும். அடுத்தவர்கள் பணத்தில் சொகுசாக வாழ்பவன் நான் இல்லை. யார் அடுத்தவர்கள் பணத்தில் சொகுசாக வாழ்கிறார்கள் என்று அந்த ஆண்டவனுக்கு தெரியும்.
கெனிஷா என்று ஒரு டாபிக் வந்தது. உங்கள் கண் முன்னாடியே தானே நான் எல்லாமே செய்து வருகிறேன். சூட்டிங்கில் எத்தனை எலும்புகள் உடைந்துள்ளன, உடம்பு சரியில்லாமல் போயுள்ளது. ஓட்டு வீட்டில் பிறந்தவன் நான்.
கோடி கணக்கில் சொத்து இருக்கிறது என்று சொல்கிறார்கள்.சம்பாதித்த பணத்தை கூட என்னால் சுதந்திரமாக செலவு செய்ய முடியவில்லை. மூன்றெழுத்து இட்லி நடிகை என் வாழ்க்கையை கெடுத்தார்.

அவர் அத்தனை குடும்பத்தை சீரழித்திருக்கிறார் என்பதை நான் சொல்லவா? ஒரே நாளில் என்னால் விவாகரத்து செய்திருக்க முடியும். என் குழந்தைகளுக்காக அமைதி காத்தேன்.
சினிமா நடிகர் என்ற இமேஜ் எனக்கு தேவையில்லை." என ரவி மோகன் மிகவும் ஆவேசமாக கத்தியும் கண்ணீர் விட்டும் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |