முதல்வர் விஜயின் மறுபக்கம்! அவரின் அமைதிக்கு இது தான் காரணம்... அம்மாவே பகிர்ந்த பின்னணி
இதுவரையில் நடிகராக உச்சத்தில் இருந்த விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 108 தொகுதிகளில் தவெக கட்சி சார்பில் வெற்றிபெற்று இன்று தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
முதல்வர் விஜய்
முன்னாள் முன்னணி நடிகரும் தற்போதைய முதல்வருமான விஜய் பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

இவரின் சினிமா பயணத்தில் ஏராளமான மாஸ் படங்களை கொடுத்துள்ளார். இவரின் படம் திரைக்கு வருகின்றது என்றால் விஜய் ரசிகர்களுக்கு திருவிழா தான்.
சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது, தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய ரசிகர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்று அரசியலில் இறங்கிவிட்டார்.

விஜய் பொதுவாகவே எப்போதும் அமைதியாக ஒரு மென்மையான புன்னனையுடன் தான் தோற்றமளிப்பார் என்பது அவரின் ரசிகர்கள் நன்கு அறிந்ததே.
இந்நிலையில் விஜயின் அமைதிக்கு பின்னால் இருக்கும் காரணம் குறித்து விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ள விடயம் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

குறித்த பேட்டியில் அவர் குறிப்பிடுகையில், விஜய் தனது 10 வயது வரையில் மிகவும் வால் பையனாக தான் இருந்தார். அதுவரையில் நோட்டி தான்... ஆனால் அவரின் தங்கையின் இறப்புக்கு பின்னர் மொத்தமாக ஆளே மாறிவிட்டார்.
தங்கையின் இறப்பால் ஏற்பட்ட அதிர்ச்சி தான் அவரின் அமைதிக்கு காரணம். வெளியில் எதையும் காட்டிக்கொள்ள மாட்டார்.

ஆனால் பாடசாலையில் கூட தங்கை பற்றிய கவிதை, போச்சு என வந்துவிட்டால் உடனே அழுதுவிடுவார் என ஆசிரியர்கள் சொல்வார்கள்.
தங்கையின் பெயர் வித்யா, இவரின் பெயரை மறக்கவே கூடாது என்பதற்காக தான் விஜய் தன் மகளுக்கு அதே ஓசையில் திவ்யா சாஷா என பெயர் வைத்தார் என குறிப்பிட்டுள்ளார்.
அவரின் தங்கை இரண்டு வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |