குளியலறையில் வைக்க கூடாத பொருட்கள் - மீறினால் பணக்கஷ்டம் வரும்
வாஸ்து சாஸ்திரம்
வாஸ்து சாஸ்திரம் நம் வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் அடிப்படையில் வாஸ்து படி வீட்டின் ஆற்றலை நமக்கு சாதகமாக மாற்ற முடியும்.
அதற்காக வாஸ்துவின் சில விதிகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றி நம் வாழ்க்கையின் சிரமங்களை குறைக்கலாம் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த பதிவில் பார்க்கப்போவது நாம் குளிக்கும் குளியலறையில் வைக்க கூடாத பொருட்கள் பற்றி. இந்த பொருட்களை மீறி வைத்தால் வீட்டில் பணக்கஷ்டம் வரும் என்று கூறப்படுகின்றது. அதை பற்றி விரிவாக பதிவில் பார்க்கலாம்.

குளியலறையில் வைக்க கூடாத பொருட்கள்
வாஸ்துபடி அறுந்த செருப்புக்களை குளியலறையில் வைக்க கூடாது என கூறப்படுகின்றது. இந்த செருப்புக்கள் வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலை கொண்டு வரும். இதனால் பணக்கஷ்டம் வரும்.
குளியலறையில் தண்ணீரில் போட்ட துணி அல்லது ஈரமான துணியை நீண்ட நேரம் வைக்க கூடாது இதை மீறி வைத்தால் வீட்டில் அது எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தும்.

உடைந்த கண்ணாடிகளை குளியலறையில் வைக்கக் கூடாது. அது வாஸ்து தோஷத்தை உண்டாக்கி, நிதி நெருக்கடி ஏற்படத்துமாம். எனவே உடைந்த கண்ணாடி இருந்தால் அதை குப்பையில் தூக்கி போடுங்கள்.
குளியலறையில் இருக்கும் வாளியில் தண்ணீர் எப்போதும் நிரம்பி இருக்க வேண்டும். இது காலியாக இருப்பது அபசகுணம் என வாஸ்துபடி கூறப்படுகின்றது.
குளியலறையில் நீர் குழாய்கள் சொட்டு சொட்டாக தண்ணீர் வடிந்து கொண்டு இருந்தால் அது வீட்டில் கெட்ட சகுனத்தையும் துரதிஷ்டத்தையும் கொண்டு வரும் என வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |