வேர்க்கடலை உருண்டையின் இரகசியம்! தயாரிப்பு முறையுடன்..
பொதுவாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்ணும் இனிப்பு பண்டங்களில் ஒன்று தான் வேர்க்கடலை உருண்டை.
வேர்க்கடலையில் மாமிசம், முட்டை, காய்கறிகளை விட புரதச் சத்து அதிகமாக காணப்படுகிறது. இதனால் வளர்ந்து வரும் சிறுவர்களுக்கு சிறந்த சிற்றுண்டியாக பார்க்கபடுகிறது.
மேலும் இதனைச் சாப்பிடுவதால் உடலில் குளிர்ச்சி ஏற்பட்டு ஆஸ்துமா, ப்ராங்கைடிஸ் போன்ற நோய்கள் நிலைமைகளை கட்டுபடுத்துகிறது.
அந்த வகையில் வேர்க்கடலை உருண்டை எவ்வாறு தயாரிப்பது தொடர்பில் தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்
வறுத்து தோல் நீக்கிய நிலக்கடலை- 1 கப்,
பொடி செய்த வெல்லம்- ¾ கப்
தண்ணீர்- ¼ கப்
ஏலம், சுக்குப் பொடி
தேவைப்பட்டால்- தலா ½ ஸ்பூன்
தயாரிப்பு முறை
முதலில் வேர்க்கடலையை ஒரு தட்டில் எடுத்து அதனை வறுத்து தோல் நீக்கி தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
தொடர்ந்து வேர்க்கடலை உருட்டுப்பதம் வந்ததும் கடலையில் வடிகட்டி பாகை ஊற்றி கரண்டியால் கிளறி, பின்னர் நெய் அல்லது அரிசி மாவு தொட்டுக் கொண்டு உருண்டை பிடிக்கவும்.
அவ்வளவு தான் சூப்பரான வேர்க்கடலை உருண்டை தயார்.