பிரம்மாண்ட வீட்டுக்கு சொந்தக்காரராகும் தாமரை! அடுத்தடுத்து அடித்த அதிர்ஷ்டம்... தீயாய் பரவும் புகைப்படம்
தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஒருவரின் முயற்சியால் பிக்பாஸ் தாமரைச்செல்விக்கு சொந்த வீடு கட்டி தர முயற்சி நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .
பிக்பாஸ் சீசன் 5, பிக்பாஸ் அல்டிமேட் ஆகிய நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்ற தாமரை செல்வி தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.
இந்த பொருட்களை அதிக நாள் பயன்படுத்த வேண்டாம்....மீறினால் விளைவு பயங்கரம்!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் லட்சக்கணக்கான மக்களின் நன்மதிப்பை பெற்ற தாமரை ஏழையாக இருந்தாலும் லட்சக்கணக்கில் ரூபாய் கிடைக்கும் வாய்ப்பு இருந்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற வில்லை.
இது ரசிகர்களுக்கு அவர் மேல் உள்ள மரியாதை இன்னும் அதிகமாக்கியது.
புது வீடு கட்டும் இசையமைப்பாளர்
இந்த நிலையில் தாமரைச் செல்வியின் குடும்பத்தினர் குடியிருக்க ஒரு நல்ல வீடு கூட இல்லாமல் இருப்பதை அறிந்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவருக்கு சொந்த வீடு கட்டி கொடுக்க முடிவு செய்தார்.
இதற்காக அவர் தாமரைச் செல்வியின் ஆதரவாளர்களை ஒன்றிணைத்து அவர்களிடம் இருந்து நிதி திரட்டி தாமரை குடும்பத்திற்கு ஒரு வீடு கட்டி கொடுக்க திட்டமிட்டுள்ளார்.
அதிர்ச்சியில் பிரியங்கா.... புதிய தொகுப்பாளினியுடன் சூப்பர் சிங்கரில் களமிறக்கிய மா.கா.பா!
தற்போது இந்த வீட்டின் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் ’தாமரை இல்லம்’ என்ற அந்த வீட்டை தாமரை செல்வியின் குடும்பத்தினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.