Sunday special: பார்த்ததாலே பசியை தூண்டும் மட்டன் குழம்பு... இந்த பக்குவத்துல செய்து பாருங்க
பொதுவாகவே சன்டே என்றால், பெரும்பாலானவர்களுக்கு ஓய்வு கிடைக்கும் என்பதால், நாவூக்கு ருசியாக சமைத்து சாப்பிட்டு, நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
அந்தவகையில் இந்த சன்டே ஸ்பெஷலாக, சற்று வித்தியாசமான முறையில் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் விரும்பி சாப்பிடும் வகையில், அசத்தல் சுவையில் மட்டன் குழம்பு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஊற வைப்பதற்கு தேவையானவை
மட்டன் - 1 கிலோ
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
மிளகாய் தூள் - 2 தே.கரண்டி
மல்லித் தூள் - 3 தே.கரண்டி
சீரகத் தூள் - 1 தே.கரண்டி
சோம்பு தூள் - 1/2 தே.கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 மேசைக்கரண்டி
தயிர் - 1 மேசைக்கரண்டி
கிரேவிக்கு தேவையானவை
நல்லெண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
பட்டை - 3 துண்டு
கிராம்பு - 5
அன்னாசிப்பூ - பாதி
ஏலக்காய் - 1
பிரியாணி இலை - 1
கல்பாசி - சிறிது
கறிவேப்பிலை - 1 கொத்து
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
சுடுநீர் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கேற்ப
கரம் மசாலா - 1 தே.கரண்டி
மிளகுத் தூள் - 1 தே.கரண்டி
கொத்தமல்லி - சிறிது
எலுமிச்சை சாறு - 1 தே.கரண்டி
நெய் - 1/2 தே.கரண்டி
செய்முறை
முதலில் மட்டனை சுத்தம் செய்து நன்றாக தண்ணீரில் கழுவி ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், சோம்புத் தூள், சுவைக்கேற்ப உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிரட்டி, 30 நிமிடங்கள் வரையில் ஊறவிட வேண்டும்.
அதனையடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய், பிரியாணி இலை, கல்பாசி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக தாளித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் ஊற வைத்த மட்டனையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து , தக்காளியையும் அதனுடன் சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின்னர், அதில் மட்டன் மூழ்கும் அளவிற்கு சுடுநீரை ஊற்றி நன்றாக கிளறிவிட்டு, குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 6-8 விசில் விட்டு இறக்கி ஆறவிட வேண்டும்.
ஆறியதும் குக்கரை திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, 5 நிமிடம் நீர் வற்றும் வரையில் கொதிக்க விட்டு, அதனுடன் கரம் மசாலா மற்றும் மிளகுத் தூளை சேர்த்து நன்றாக கிளறி, 2 நிமிடங்கள் வரையில் கொதிக்க வைத்து இறக்கி கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளறி விட வேண்டும்.
இறுதியாக நெய் சேர்த்து கிளறினால் அவ்வளவு தான் அருமையபன சுவையில் மட்டன் கிரேவி தயார்.

personality: உங்களுக்கு சிவப்பு நிறம் அதிகம் பிடிக்குமா? அப்போ இந்த குணங்கள் இருக்கான்னு செக் பண்ணுங்க
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |