பார்த்தலே பசியை தூண்டும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு... இப்படி செய்தால் பிடிக்காதவர்களும் சாப்பிடுவார்கள்
பொதுவாகவே எல்லா காலங்களிலும் பெற்றுக்கொள்ளக்கூடிய கத்தரிக்காயில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் செறிந்து காணப்படுகின்றது.
கத்தரிக்காய் கொழுப்பைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கச் செய்கின்றது. மேலும் தோல் சம்பந்தப்பட்ட அலர்ஜி பிரச்சினை உள்ளவர்களும் பிஞ்சுக் கத்தரிக்காயினை சாப்பிடலாம்.
புற்றுநோய் கிருமிகளுக்கு எதிராகப் போராடும் தன்மை கொண்டதாகவும், மேலும் சர்க்கரை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கும் காய்களில் ஒன்றாக கத்தரிக்காயும் உள்ளது.இவ்வளவு மருத்துவ நன்மைகள் நிறைந்த கத்தரிக்காயை பெரும்பாலும் குழந்தைகள் தவர்த்துவிடுகின்றனர்.
குழந்தைகள் கேட்டு வாங்கி சாப்பிடும் அளவுக்கு நாவூரும் சுவையில், எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் - 300 கிராம்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
வதக்கி அரைப்பதற்கு தேவையானவை
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 10 பல்
தக்காளி - 1 (நறுக்கியது)
சீரகம் - 1 தே.கரண்டி
மிளகு - 1 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
மல்லித் தூள் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் (விருப்பமிருந்தால்)
தாளிப்பதற்கு தேவையானவை
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி
வெந்தயம் - 1/2 தே.கரண்டி
பெருங்காயத் தூள் - 1/2 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - சுவைக்கேற்ப
புளி - பெரிய எலுமிச்சை அளவு
கெட்டியான தேங்காய் பால் - 1/2 கப்
வெல்லம் - சிறிதளவு
செய்முறை
முதலில் கத்திரிக்காயை சுத்தம் செய்து கீறிவிட்டு, தண்ணீரில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், கத்திரிக்காயை சேர்த்து, சிறிது உப்பு தூவி மிதமான தீயில் நன்றாக வதக்கியெடுத்து ஒரு தட்டில் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே எண்ணெயில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் தக்காளியையும் சேர்த்து மென்மையாகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் சீரகம், மிளகு சேர்த்து நன்றாக வதக்கி இறக்கி குளிரவிட வேண்டும். பின்னர் அதனை ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து, அத்துடன், மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கிளறி, நன்கு பச்சை வாசனை போகம் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்பு அதில் புளிச்சாற்றினை சேர்த்து கிளறி சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, குழம்பு சுண்டும் வரை கொதிக்க விட வேண்டும்.
குழம்பு பதத்திற்கு வந்ததும் அதில் வதக்கி வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து, அத்துடன் சிறிது வெல்லத்தை சேர்த்து கிளறி, மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து, 10 நிமிடம் நன்கு எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விட்டு இறக்கினால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |