cowpea curry: செரிமானம் முதல் இதய பிரச்சினைகள் வரை... தீர்வு கொடுக்கும் காராமணி குழம்பு
பொதுவாகவே ஊட்டச்சத்து நிறைந்த தானியங்களின் பட்டியலில் காராமணி நிச்சயம் முக்கிய இடத்தை பிடித்துவிடுகின்றது. இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்திதை சீராக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றது.
உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை எளிதாக உறிஞ்சுவதற்கு இதை உட்கொள்ளலாம்.காராமணியில் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் கொழுப்பு உள்ளது. அதனை உட்கொள்வதால் நீண்ட நேரம் பசி ஏற்படாமல் தடுக்கிறது.
உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று போராடுபவர்களுக்கு காராமணி சிறந்த தெரிவாக இருக்கும்.
காராமணியில் குறைந்த அளவு நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளன மற்றும் கொலஸ்ட்ரால் இல்லை, அவை இதயத்தை ஆரோக்கியமாக்குகின்றன.
அதிக ஃபைபர் உள்ளடக்கம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
உணவில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால் முறையே ட்ரைகிளிசரைடுகள், கெட்ட கொழுப்பு (எல்டிஎல்) மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
மேலும், இதிலுள்ள பைட்டோஸ்டெரால் கூறுகள் உடலின் சிறந்த கொழுப்பு சமநிலையை பராமரிக்க உதவுகிறது. அவ்வளவு ஊட்டச்சத்து நிறைந்த காராமணியை கொண்டு அசத்தல் சுவையில் எவ்வாறு குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
காராமணி - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - கால் தே.கரண்டி
பெருங்காயத் தூள் - கால் தே.கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தே.கரண்டி
சோம்பு - 1 தே.கரண்டி
கரம் மசாலா (பட்டை – 1, கிராம்பு – 2, ஏலக்காய் – 1, பிரியாணி இலை – 1, ஸ்டார் சோம்பு – 1)
பெரிய வெங்காயம் - 2 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது - 1 தே.கரண்டி
பச்சை மிளகாய் - 2
தக்காளி விழுது - ¼ கப்
காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தே.கரண்டி
சீரகப் பொடி - 1 தே.கரண்டி
கொத்தமல்லித் தூள் - 1.½ தே.கரண்டி
ட்ரை மாங்காய் பொடி - 1 தே.கரண்டி
கரம் மசாலா - 1 தே.கரண்டி
கொத்தமல்லித் தழை - ஒரு கொத்து
செய்முறை
முதலில், காராமணியை நன்றாக கழுவி சுத்தம் செய்து 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
அதனையடுத்து ஊற வைத்த காராமணியை பிரஷர் குக்கரில் போட்டு, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து,மிதமான தீயில் 4 முதல் 5 விசில்கள் வரும் வரை நன்கு வேகவிட வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும் அதில் சீரகம், சோம்பு, முழு கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
இதையடுத்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரையில் நன்கு வதக்கி வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது மற்றும் கீறிய பச்சை மிளகாயைச் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர், அதில் அரைத்த தக்காளி விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து உப்பு, காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள், சீரகத் தூள், கொத்தமல்லித் தூள், ஆம்சூர் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.
பின்னர் குக்கரில் வேக வைத்த காராமணியை தண்ணீருடன் அதில் சேர்க்கவேண்டும். மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து, பாத்திரத்தை மூடி நன்றாக கொதிக்கவிட வேண்டும்.
இறுதியில் கரம் மசாலா தூள் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு இறக்கினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த காராமணி குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |