கண்முன்னே உயிரைவிட்ட கணவன் : தண்ணி கூட கொடுக்க விடல... அரங்கத்தை கண்ணீரில் ஆழ்த்திய பெண்!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மக்களின் மனம் கவர்ந்த தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த வாரம், யார் வாழ்க்கை மிக துயரமானது? கணவனை இழந்தவர்கள் மற்றும் மனைவியை இழந்தவர்கள் என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
குடி பழக்கத்துக்கு அடிமையாகி இறுதியில் மாரடைப்பால் உயிரை விட்ட கணவன் குறித்து தமிழா தமிழா அரங்கத்தில் கண்ணீர் மல்க பேசிய பெண்ணின் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து வருகின்றது.

தமிழா தமிழா நிகழ்ச்சி
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தமிழா தமிழா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று வெற்றி நடைபோட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக அறியப்படுகின்றது.
பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கென ஒரு தனித்துவமாக ரசிகர் படையே இருக்கின்றது.

இந்நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு பரபரப்பான விவாதம் அல்லது சுவாரஸ்யமான கலந்துரையாடல் வாரம் தோறும் நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில், இந்த வார நிகழ்ச்சியில், கணவனை இழந்த பெண்ணொருவர் கணவனின் இறுதி தருணம் குறித்து வெளிப்படுத்தியுள்ள மனம் பதைக்கும் உண்மை சம்பவம் தற்போது இணையத்தில் படுவைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |