Tamizha Tamizha: நகை மீது மோகம் கொண்ட பெண்ணை வெட்கப்பட வைத்த தொகுப்பாளர்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் தங்க நகைகள் மீது அதிக மோகம் கொண்ட அம்மாக்கள் மற்றும் ஆர்வம் இல்லாத மகள்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் தங்க நகைகள் மீது அதிக மோகம் கொண்ட அம்மாக்கள் மற்றும் ஆர்வம் இல்லாத மகள்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
தங்க நகைகளை அணிந்து கொண்டு தனது அம்மா செய்யும் அலப்பறைகளை அரங்கத்தில் கொட்டித் தீர்த்துள்ளனர் மகள்கள். மேலும் தன்னிடம் உள்ள நகைகளைக் குறித்தும் பெண் ஒருவர் பேசியுள்ளார்.
இதனை கேட்ட தொகுப்பாளர் பிரமிப்பில் ஆழ்ந்ததுடன், அந்த அம்மாவை அடுத்தடுத்து கேள்வி எழுப்பி வெட்கப்பட வைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
