Tamizha Tamizha: பதக்கம் வாங்கும் போது பக்கத்தில் இல்லாத அப்பா....அரங்கத்தில் தொகுப்பாளர் கொடுத்த பதில்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து குடும்பத்தை கண்டுகொள்ளாத கணவன் Vs மனைவி என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து குடும்பத்தை கண்டுகொள்ளாத கணவன் Vs மனைவி என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
கணவன் வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு வீட்டு காரியங்களில் முக்கியத்துவம் இல்லாத வலியை பெண் ஒருவர் விளக்கியுள்ளார்.
மகள் ஒருவர் தான் விளையாட்டில் பதக்கம் பெற்ற போது தனது தந்தை இல்லாதது வலியாக இருந்தது என்றும் மற்றவர்கள் தந்தையுடன் பதக்கத்தை வாங்கும் போது ஏக்கமாக இருந்ததாக கூறி அரங்கத்தில் அழுதுள்ளார்.
தொகுப்பாளர் ஆவுடையப்பன் குறித்த சிறுமியை அரங்கத்திற்கு அழைத்து, அவரது வலியை பகிர வைத்ததுடன், அவரது தந்தையை மன்னிப்பும் கேட்க வைத்துள்ளார்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |