ஜல்லிக்கட்டில் சீறி வந்த காளை: எஜமானை பார்த்ததும் குழந்தையாக மாறிய காட்சி
இந்தியாவில் பொங்கல் பண்டிகையில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நேற்று அவனியாபுரத்தில் நடந்து முடிந்த நிலையில், இன்று பாலமேட்டிலும் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.
சில ஆண்டிற்கு முன்பு இந்த வீர விளையாட்டிற்கு தடைவிதித்த போது உலகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் இதற்காக போராடி இறுதியில் அனுமதி வாங்கி வீர விளையாட்டை தொடர்ந்தனர்.
தற்போது கொரோனா காலத்தில் அரசின் விதிகளைக் கருத்தில் கொண்டு இரண்டு தடுப்பூசி செலுத்திய வீரர்களை மட்டுமே அனுமதித்து விளையாட்டு ஆரம்பமாகியுள்ளது.
இன்று நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் சீறி வந்த காளை ஒன்று தனது எஜமானை பார்த்ததும் குழந்தையாக மாறியுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.