Super Singer: அரங்கத்தை தெறிக்கவிட்ட சிறுமிகள்... திணறிய நடுவர்கள்
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10 நிகழ்ச்சியில் சாராஸ்ருதி மற்றும் நஸ்ரின் இருவரும் போட்டியில் களமிறங்கியுள்ள நிலையில், நடுவர்கள் முடிவு எடுக்க முடியாமல் திணறியுள்ளனர்.
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10
பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றது.
10வது சீசனில் இருக்கும் இந்த நிகழ்ச்சியில் திறமையுள்ள சிறுவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி வருகின்றனர்.
குறித்த மேடையில் மழலையின் குரல் தற்போது நடுவர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வகையில் இந்த வாரம் நேருக்கு நேர் போட்டி நடைபெறுகின்றது. நஸ்ரினுக்கு போட்டியாக சாராஸ்ருதி பாடல் பாடியுள்ளார்.
இருவரும் மிகவும் கஷ்டமான பாடலை எடுத்து சிறப்பாக பாடியுள்ள நிலையில், நடுவர்கள் முடிவு எடுப்பதில் குழப்பத்தில் காணப்படுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |