சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்க கையில பணம் அதிகம் சேரப் போகுது!
மேஷம் ராசிக்கு சூரியன் செல்லும் போது சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்கள் கிடைத்தாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களும், அதிக பணமும் கிடைக்கும்.
மேஷம் சென்ற சூரியனால் மே 15 ஆம் தேதி வரை எந்த ராசிக்காரர்களின் கையில் அதிக பணம் சேரப்போகிறது என்பதைக் காண்போம்.
சினேகாவின் மகளா இது.... இவ்வளவு வளர்ந்துட்டாரே! மனைவியை அலேக்காக தூக்கிய பிரசன்னா
மேஷம்
அரசு துறையில் இருப்பவர்கள் நற்பலன்களைப் பெறுவார்கள். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். வருமான வளர்ச்சிக்கான வலுவான வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக, மிகவும் வலுவாக இருப்பார்கள்.
ரிஷபம்
இந்த ராசிக்காரர்கள் வெளிநாட்டில் இருந்து ஆதாயமடைவார்கள். ஏற்கனவே வெளிநாட்டில் பணிபுரிந்து வருபவர்கள், இக்காலத்தில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். திடீர் பண வரவைப் பெறுவார்கள்.
மிதுனம்
இந்த ராசிக்காரர்கள் நல்ல பண ஆதாயங்களைப் பெறுவார்கள். நிதி நிலைமை வலுவாகும். தொழிலில், நீங்கள் எதிரிகளிடமிருந்து ஆதாயமடைவீர்கள். பணியிடத்தில் புகழ்பெற்ற மற்றும் செல்வாக்கு மிக்க நபர்களுடன் நீங்கள் தொடர்பில் இருப்பீர்கள். வணிகர்களுக்கு தொழிலை விரிவுப்படுத்த பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கடகம்
வியாபாரத்தில் இருப்பவர்கள் அல்லது அரசுத் துறையில் இருப்பவர்களும் இந்தப் பெயர்ச்சியால் சாதகமான வாய்ப்புகளைப் பெறுவார்கள். நிதி ரீதியாக இக்காலம் சாதகமாக இருக்கும். வேலையில் இருந்தால், உங்கள் சம்பளம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
சிம்மம்
சமூக அந்தஸ்து அதிகரிக்கும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களிடமிருந்து ஆலோசனையைப் பெற விரும்புவார்கள். தொழில் ரீதியாக இது உங்களுக்கு மிகவும் சாதகமான நேரம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் உதவியால் பலன் கிடைக்கும். உங்கள் முன்னேற்றத்திற்கான வழிகளும் திறக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.
கும்பம்
தொழில் சிறப்பாக இருக்கும். முன்பு செய்த முதலீடுகள் தற்போது உங்களுக்கு நிதிப் பலன்களைத் தரும். சில பண ஆதாயங்களைப் பெற வாய்ப்புள்ளது மற்றும் உங்கள் துணையின் அதிர்ஷ்டமும் உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.