கோடை வெயிலுக்கு ஏற்ற கம்பங்கூழ்.. என்னென்ன பலன்கள் தெரியுமா?
கோடை காலத்தின் கொடூர வெப்பத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு கம்பங்கூழ் சிறந்த பானமாக கருதப்படுகின்றது.
கம்பங்கூழ்
நமது முன்னோர்கள் கம்பு, கேப்பை போன்ற தானியங்களை கஞ்சி வடிவில் தயாரித்து, தினசரி உணவாக உட்கொண்டு வந்தனர்.
கோடையில் அதிகம் காணப்படும் உடல் சூடு, நீரிழிவு, செரிமான கோளாறுகள் போன்றவற்றுக்கு தீர்வாக, இயற்கையான கம்பங்கூழை குடிப்பது சிறந்தது.
இன்றைய காலத்தில் பலரும் ரசாயம் கலந்து குளிர்பானங்களில் பருகுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் இவை உடம்பிற்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை ஆகும்.
இளம்வயதினரிலிருந்து, முதியவர்கள் என அனைவருக்கும் வரக்கூடிய சோர்வு, உடல் உஷ்ணம் ஆகியவற்றை தணிக்க கம்பங்கூழ் உதவுகின்றது.
சாலையோர கடைகளில் கிடைக்கும் கம்பங்கூழை குடித்தால், இயற்கையாகவே உடல் உஷ்ணத்தை குறைக்கலாம்.
கம்பில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், புரதம், வைட்டமின் ஈ, பி உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. இது ரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன், தலைமுடி உதிர்வையும் குறைக்கின்றது. மலச்சிக்கல் பிரச்சனையை போக்கி, உடல் எடையை கட்டுப்படுத்துகின்றது.
கோடை வெப்பத்தை சமாளிக்க, கம்பங்கூழ், தர்பூசணி, பதநீர், நன்னாரி சர்பத், இயற்கை ஜூஸ்கள் ஆகியவற்றை சாப்பிடுவதன் மூலம், உடல் முழுவதும் புத்துணர்ச்சி ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |