முதல் தடவையாக ஹாலிவுட் படத்தில் இலங்கை மலையக பெண்.. என்ன திரைப்படம் தெரியுமா?
முதல் தடவையாக இலங்கை- மலையகத்தை சேர்ந்த பெண்ணொருவர் பாலிவுட் திரைப்படத்தில் கமிட்டாகி நடித்திருக்கும் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ஹாலிவுட் திரைப்படம்
இலங்கை- மலையகத்தில் ஹட்டன் நகரில் பிறந்து வளர்ந்த பெண்ணொருவர் குறும்படங்கள் மற்றும் போட்டோ ஷூட்கள் செய்து வந்துள்ளார்.
அதன் பின்னர், இந்தியாவுக்கு சென்று அங்கு படிப்பை முடித்து விட்டு, மீண்டும் இலங்கைக்கு திரும்பிய பொழுது “ரிசானா A CAGED BIRD” என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
வாய்ப்பு
இந்த திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலமாக இருக்கும் வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் ஹொலிவூட் நடிகரும் நடிக்கிறார்கள்.
மிகவும் உணர்ச்சிகரமாக எடுக்கப்போகும் இந்த திரைப்படத்தில் குறித்த பிரபலம் நடிப்பதற்கு மகிழ்ச்சிக் கொள்வதாக இலங்கை ஊடகமொன்றிற்கு பேட்டிக் கொடுத்த காணொளி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், இலங்கை- மலையகத்துக்கு மக்கள் அனைவரும் குறித்த பெண்ணிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |