4 வருடங்களுக்கு பின் பிறந்த இரட்டை குழந்தைகள்.. லட்டு மாதிரி இருக்காங்க பாருங்களே!
பாடலாசிரியர் சினேகன் மற்றும் கன்னிகா தம்பதிகள் முதல் முறையாக தனது குழந்தைகளின் போட்டோவை இணையத்தில் பகிர்ந்துள்ளன
சினேகன்- கன்னிகா
தென்னிந்திய சினிமாவில் பாடலாசிரியர், கவிஞர், நடிகர், அரசியல்வாதி, பேச்சாளர் என பன்மக திறமை கொண்டவர் தான் சினேகன்.
இவர், பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை, ஞாபகம் வருதே, ஆராரிராரோ நான் இங்கே இங்கே பாட என ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த 2500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார்.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 1-ல் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.
இதற்கிடையில், 2021ம் ஆண்டு ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சினேகன், அண்மையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
மனைவிக்கு கொடுத்த பரிசு
இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு கன்னிகா திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடந்து முடிந்தது. திருமணமாகி 4 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது கன்னிகா தாயாகி இருக்கிறார்.
அந்த வகையில், சினேகன்- கன்னிகா தம்பதிகளுக்கு குழந்தை பிறந்து ஐந்து மாதமாகி உள்ள நிலையில், தனது இரட்டை பெண் குழந்தைகளை முதன் முதலாக மீடியாவில் அறிமுகப்படுத்தி உள்ளார்.
அழகான பாவாடை சட்டையில் இரண்டு குழந்தைகளும் க்யூட்டா உள்ளனர். லட்டு போல இருக்கும் இரட்டை குழந்தைகளை பார்த்த இணையவாசிகள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
மேலும், சிலர் “கண்ணு பட போகுது சுத்திப்போடுங்க சார்..” என கமெண்ட் பாக்ஸில் கருத்துக்கைள பகிர்ந்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |



