பட்டுப்புடவையில் கொள்ளை அழகில் நடிகை சினேகா! அடுத்தடுத்து அரங்கேறும் கொண்டாட்டம்
நடிகை சினேகா அழகான பட்டுப்புடவையில் கொள்ளை அழகுடன் காணப்படும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை சினேகா
தமிழ் திரையுலகின் புன்னகை அரசி என்று போற்றப்படும் நடிகை சினேகா, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகினார்.
பின்பு இரண்டு குழந்தைகளுக்கு தாயான சினேகா, அவ்வப்போது வீட்டு விசேஷங்களை புகைப்படமாக வெளியிட்டு வருகின்றார். தற்போது சில ரிவி நிகழ்ச்சி மற்றும் சீரியல்களில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.
சமீபத்தில் தனது தந்தை ராஜாராமின் பிறந்தநாளை குழந்தைகள் காப்பகத்தில் மிகவும் எளிமையாக கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகை சினேகா வீட்டில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்பட்டு சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
பட்டுப்புடவையில் ஜொலிக்கும் சினேகா
வீட்டில் நடைபெற்ற வரலட்சுமி பூஜை கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகும் நிலையில், சினேகாவின் மற்றொரு புகைப்படமும் தற்போது வைரலாகி வருகின்றது.
பட்டுப்புடவை ஒன்றினை அணிந்து அழகான மேக்கப்புடன் அட்டகாசமான அழகில் ஜொலிக்கும் புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
சினேகாவின் குறித்த புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் பொறாமையில் பொங்கி வருகின்றனர்.