Viral Video: படமெடுத்தவரை பாய்ந்து கடிக்க வந்த பாம்பு... திகிலடைய வைத்த காட்சி
படமெடுத்த நபரை பாம்பு ஒன்று ஆக்ரோஷமாக தாக்க முயற்சிக்கும் காட்சி காண்பவர்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடிக்க பாய்ந்த பாம்பு
பாம்பு என்றாலே நம் அனைவருக்கும் பயம் தான் ஏற்படும். ஏனெனில் பாம்பின் விஷம் மனிதர்களின் உயிரை நொடியில் பறித்துவிடும்.
ஆம் பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டதாக இருப்பதாலே மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். காடுகள், வயல்கள் இவற்றில் காணப்படும் பாம்புகள் தற்போது வாகனங்களிலும், குடியிருக்கும் வீடுகளுக்குள்ளும் வந்து விடுகின்றது.
சில தருணங்களில் நாம் அணியும் காலணியிலும் கூட பதுங்கி இருக்கின்றது. இவ்வாறு மனிதர்களை பாம்புகள் அச்சுறுத்தி வந்தாலும், ஒரு சில தருணங்களில் மனிதர்களிடம் பாசமாக இருப்பதை அவதானித்து வருகின்றோம்.
இங்கு பாம்பு ஒன்று தன்னை படமெடுத்த நபரை ஆக்ரோஷமாக பாய்ந்து தாக்க முயற்சித்த காட்சி வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |