இரவு 11 மணிக்கு மேல் தூங்குறீங்களா? உடலில் இந்த 3 உறுப்பும் பத்திரம்
இரவில் மிகவும் தாமதாக அதாவது 11 மணிக்கு மேல் தூங்கினால் உடலில் சில உறுப்புகள் பாதிக்கப்படும் என கூறப்படுகின்றது.
தாமதமாக தூங்கும் பழக்கம்
நம்மில் பலரும் இப்போது சரியான நேரத்திற்கு தூங்குவது இல்லை. இதை பலரும் சாதாரணமாக நினைக்கின்றனர்.
ஆனால் உண்மையில் இது நம் உடல் உறுப்புக்களை பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கும். சிலர் ஸ்மாட்போன்களில் நேரத்தை செலவழித்துக்கொண்டு நள்ளிரவு 2 மணிக்கு மேலும் தூங்குகின்றனர்.
இப்படி தாமதமாக தூங்கும் பழக்கம் இருந்தால் அது உடலில் முக்கிய உறுப்புக்களை பாதிக்கும் எனப்படுகின்றது. அதன்படி எந்த உறுப்பக்கள் பாதிப்படையும் என்பது பற்றி பதிவில் பார்க்கலாம்.

கல்லீரல் பாதிப்பு
நமது உடலில் கலலுீரல் மிக முக்கியமான ஒரு உறுப்பாகும். இந்த உறுப்பு இரவு11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை உடலில் நச்சுக்களை வடிகட்டி உடலை சுத்தப்படுத்தும்.
எனவே தான் இரவில் தாமதமாக தூங்கினால் இந்த கல்லீரலின் வேலை தடைபடும். இதனால் கல்லீரல் கொழுப்பு கல்லீரல் பாதிப்பு வேறு உறுப்புக்களிலும் பாதிப்பு ஏற்படலாம்.

குடல் செயல்பாட்டை பாதிக்கிறது
நாம் இரவில் தூங்காமல் கண்விழ்த்து இருந்தால் நமக்கு பசி வரும். இதற்கு காரணம் கார்டிசோலின் தான். இது உடலில் அதிகமாகும் போது நம் உடலின் பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோன் வேலை செய்யாது. இதனால் தான் நமக்கு பசி வரும்.
பசித்தால் சாப்பிட தோன்றும். அப்படி சாப்பிட்டால் நமது குடலில் சமாட்டு தன்மை பாதிக்கப்படும். வளர்சிதை மாற்றம் பாதிப்படையும். மலச்சிக்கல் ஏற்படும்.

மூளை மற்றும் நினைவாற்றலில் பாதிப்பு
நமது மூளைக்கு ஓய்வு கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியம். அப்போது தான் நமது மூளை அதற்கேற்றார் போல வேலை செய்யும். சிலர் இரவு தாமதமாக தூங்கும் பழக்கத்தை வைத்துள்ளனர்.
மூளையானது இரவில் தான் அதன் கழிவுகளை கிளிம்பேடிக் அமைப்பு மூலம் சுத்தப்படுத்துகிறது. தாமதமாக தூங்கினால் மூளைக்கு ஓய்வு கிடைக்காது.
இதன் காரணமாக நினைவாற்றல் இழப்பு, எரிச்சல், மன அழுத்தம் மற்றும் நீடித்த ப்ரெயின் ஃபாக் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |