மருத்துவமனையிலிருந்து சிறையில் அடைக்கப்பட்ட சிவசங்கர் பாபா... வெளியான புகைப்படம்
பள்ளி மாணவியருக்குப் வன்கொடுமை தொல்லை கொடுத்த அளித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் தனியார் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, மாணவிகளை தவறாக துன்புறுத்திய செய்த குற்றச்சாட்டில் ஜூன் 16ஆம் நாள் டெல்லி அருகே சிபிசிஐடி பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
விமானத்தில் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட சிவசங்கர் பாபா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதால் ஜூன் 18ம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை இருதயவியல் பிரிவில் உள் நோயாளியாகச் சேர்க்கப்பட்டார்.
இன்று காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் அவரைப் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று புழல் சிறையில் அடைத்துள்ளனர்.