முதன் முறை மகனை காட்டிய சிவகார்த்திகேயன்... தந்தையின் பெயரை சூட்டி அழகு பார்த்த அரிய புகைப்படம்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனுக்கு சமீபத்தில் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது மகனை கொஞ்சும் புகைபடம் வெளியிட்டு, பெயரையும் அறிவித்துள்ளார்.
இவருக்கு இவருடைய மாமன் மகள், ஆர்த்தியுடன் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில், இவர்களுக்கு ஆராதனா என்கிற மகளும் உள்ளார்.
கடந்த ஜூலை மாதம் தனக்கு மகன் பிறந்த தகவலை மிகவும் உணவு பூர்வமாக வெளிப்படுத்தி இருந்தார் சிவகார்த்திகேயன்.
தற்போது தன்னுடைய மகனை கொஞ்சும் புகைபடம் ஒன்றை வெளியிட்டு மகனின் பெயர் குகன் தாஸ் என அறிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் தந்தை பெயர் தாஸ், எனவே தந்தையின் பெயரையே தாற்போது மகனுக்கு சூட்டி அழகு பார்த்துள்ளார் சிவகார்த்திகேயன்.
மேலும் எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..உங்கள் அன்போடும் ஆசியோடும் “குகன் தாஸ்” என பெயர்சூட்டியிருக்கிறோம். என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.