Siragadikka Aasai: சீதாவிற்கு திருமணம் செய்து வைத்த மீனா! திடீரென வந்து நின்ற முத்து
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா முத்துவிற்கு தெரியாமல் சீதா, அருண் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
வீட்டில் பொய் கூறி வாழ்ந்து வந்த ரோகினியை மனோஜ் மற்றும் விஜயா ஒதுக்கி வைத்த நிலையில் தற்போது சமாதானம் ஆனார்.
ஆனால் தற்போது திருட்டு செயின் மூலம் மீண்டும் விஜயாவிடம் ரோகினி அடி வாங்கியுள்ளார். இந்நிலையில் மீனா சீதா மற்றும் அருண் காதலுக்கு சம்மதம் தெரிவித்து பதிவு திருமணம் செய்து வைத்துள்ளார்.
மீனா பதிவு திருமண அலுவலகத்தில் நிற்பதை முத்துவும் நேருக்கு நேர் அவதானித்துள்ள நிலையில், அவருக்கு உண்மை தெரிந்துவிடுமா? முத்து மீனா இருவரும் பிரிந்துவிடுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |