Siragadikka Aasai: அண்ணாமலையிடம் மாட்டிக் கொள்வாரா மலேசியா மாமா?
சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலையிடம் மலேசியா மாமா மாட்டிக் கொள்வது போன்று ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து வாழ்க்கையை கொண்டு செல்லும் மீனாவை மாமியார் கொடுமை செய்கின்றார். ஆனால் கணவர் முத்து மீனாவிற்கு ஆறுதலாக இருந்து வருகின்றார்.
மீனாவை தொழிலில் இருந்து விரட்டுவதற்கு சிந்தாமணி சதி செய்து வரும் நிலையில், தற்போது அண்ணாமலை நண்பர் வீட்டு திருமணத்தில் குடும்பமாக கலந்து கொண்டுள்ளனர்.
இதில் பெண்ணின் தாய்மாமா மலேசியா மாமா என்பது மீனாவின் குடும்பத்திற்கு தெரியாத நிலையில், அனைவரும் மண்டபத்திற்குள் இருக்கின்றனர்.
இத்தருணத்தில் முத்து மலேசியா மாமாவை தனத தந்தையை அழைத்து வந்து காட்டுவது போன்று ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
ஆனால் இந்த முறையும் ரோகினி தப்பித்துக் கொள்வார். ஏனெனில் ரோகினியின் உண்மை தான் இந்த சீரியலின் க்ளைமேக்ஸ் ஆக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
ஆதலால் முத்து தனது தந்தையை அழைத்து காட்டியுள்ள சம்பவம் என்னவெனில் விஜயா தனது மூன்று மருமகள்களுடன் அமர்ந்து சாப்பிடும் காட்சியாகத் தான் இருக்கும் என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
