Siragadikka Aasai: முடிவிற்கு வரும் ரோகினியின் பிரச்சனை... பாட்டி எடுக்கும் முடிவு என்ன?
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினியின் பிரச்சனைக்கு தீர்ப்பதற்கு ஊரிலிருந்து பாட்டி வந்துள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
ரோகினி தனது வாழ்க்கையில் நடந்த உண்மையை மறைந்து வாழ்ந்து வந்த நிலையில், மலேசியா மாமா குறித்த உண்மை அனைவருக்கும் தெரியவந்துள்ளது.
இந்த உண்மையால் கொதித்தெழுந்த விஜயா ரோகினியை அடித்து வெளியே துரத்தியுள்ளார். ரோகினி ஏமாற்றிய சோகத்தை தாங்க முடியாத மனோஜ் குடித்துவிட்டு பிரச்சனை காவல்நிலையம் வரை சென்றுள்ளது.
இதனால் மனம் வருந்திய அண்ணாமலை பிரச்சனைக்கு முடிவு காண்பதற்கு தனது தாயை ஊரிலிருந்து வரவழைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
