Siragadikka Aasai: உண்மையை உளறிக் கொட்டிய ரோகினி! கொத்தாக மடக்கிய முத்து
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி தவளை தனது வாயினால் கெடும் என்ற பழமொழிக்கு ஏற்ப முத்துவிடம் வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
ரோகினி கூறிய பொய்யில் மலேசியா மாமா குறித்த உண்மை அம்பலமாகிய நிலையில், விஜயா ரோகினியை மனோஜிடம் இருந்து பிரிப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.
சிட்டியுடன் கூட்டணி சேர்ந்து ரோகினி முத்துவின் காரை பழுதாக்கி விபத்தில் சிக்க வைத்துள்ளார். இதனால் முத்து மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கி தற்போது மீனாவின் உதவியால் வெளியே வந்துள்ளார்.
தற்போது காரையும், தனது ஓட்டுனர் உரிமத்தையும் போலிசாரிடமிருந்து பெற்றுக்கொண்ட முத்து, நேரடியாக வீட்டிற்கு வந்து தனது அப்பாவிடம் பிரேக் ஒயரை கட் செய்திருப்பதாக கூறியுள்ளார்.
இத்தருணத்தில் ரோகினி தனது மீது தவறு இல்லை என்பதை கூறுவதற்கு வாயைத் திறந்து தானாகவே மாட்டிக் கொண்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |