Siragadikka Aasai: முத்துவை நேரம் பார்த்து பழிவாங்கும் அருண்... எப்படி தப்பிக்கப் போகிறார்?
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அருணும் சேர்ந்து பழிவாங்குவதற்கு முயற்சி எடுத்து வருகின்றார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
விஜயாவின் நடனபள்ளிக்கு வந்த காதல் ஜோடியால் தற்போது முத்துவை போலிசார் கைது செய்துள்ளனர்.
அதாவது முத்து அனுப்பியதாக கூறி சிட்டியின் அடியாட்கள் சென்று காதலன் வீட்டிற்கு சென்று குடும்பத்தினரை தாக்கியுள்ளனர்.
இதனால் போலிசார் முத்துவைக் கைது செய்துள்ள நிலையில், அருண் முத்துவிற்கு ஆதரவாக பேசுவது போன்று பேசிவிட்டு, வெளியே வந்து போலிசாரிடம் 10 வருடம் முத்துவை சிறையில் போடுவதற்கு கூறியுள்ளார்.
அருணின் இந்த வில்லத்தனத்தினால் அடுத்து முத்துவிற்கு நடக்கவிருப்பது என்ன? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |