Siragadikka Aasai: மீனாவிற்கு கிடைத்த பெரிய ஆர்டர்... பணத்திற்கு விஜயா போட்ட தடை
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவிற்கு புதியஆர்டர் கிடைத்துள்ள நிலையில், அதற்கு முன்பணம் தேவைப்படுவதாக முத்து வீட்டில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
ரோகினி தனது வாழ்க்கையில் நடந்த உண்மையை மறைத்து வாழ்ந்து வந்த நிலையில், சமீபத்தில் மலேசியா மாமா உண்மை பூதாகரமாக வெடித்தது.
பணக்கார மருமகள் என்று ரோகினியை கொண்டாடி வந்த விஜயா, தற்போது பயங்கரமாக கொடுமைபடுத்துகின்றார். சமீபத்தில் சிட்டி சத்யாவை பிடித்து வைத்து பரிட்சை எழுதவிடாமல் தடுத்த நிலையில், முத்து கடைசி நிமிடத்தில் காப்பாற்றியுள்ளார்.
தற்போது மீனாவிற்கு புதிய ஆர்டர் ஒன்று கிடைத்துள்ளது. இதற்காக முன்பணம் 2 லட்சம் கட்ட வேண்டியுள்ளது. இதனை முத்து வீட்டில் உள்ளவர்களிடம் கூறுகின்றார்.
முதல் ஆளாக விஜயா பணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், முத்து பணத்தை எவ்வாறு ஏற்பாடு செய்யப் போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |