Siragadikka Aasai: மீனாவால் வீட்டை விட்டுச் சென்ற முத்து... அடுத்த நடக்கப்போவது என்ன?
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா வெளியிட்ட வார்த்தையினால் மனக்கஷ்டத்தில் இருந்த முத்து எங்கு சென்றுள்ளார் என்று தெரியாமல் மீனா தேடி வருகின்றார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முத்து மீனா இருவரின் நடிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
மீனா முத்து இருவரும் பல தடைகளை தாண்டி தங்களது உழைப்பினால் மகிழ்ச்சியில் இருக்கும் நிலையில், தற்போது மனவருத்தம் ஏற்பட்டுள்ளது.
தான் அதிகமாக சம்பாதிப்பதாகவும், உண்டியலில் அதிகமாக பணம் போடுவதாகவும் மீனா எதார்த்தமாக கூறினார். இதனால் மனக் கஷ்டம் ஏற்பட்ட முத்து காலையில் சீக்கிரமாக எழுந்து வெளியே சென்றுள்ளார்.
முத்து எங்கு சென்றுள்ளார் என்று தெரியாத மீனா அவரை பல இடங்களில் தேடி அழைந்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |