Siragadikka Aasai: முத்துவின் பாசத்தால் கண்கலங்கி நின்ற விஜயா... எதனால் இந்த மாற்றம்?
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மது அருந்திவிட்டு விஜயாவிடம் பாசமாக பேசிய காட்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளதுடன், விஜயாவையும் வாயடைக்க வைத்துள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
வீட்டில் பொய் கூறி வாழ்ந்து வந்த ரோகினி தற்போது விஜயாவிடம் வசமாக மாட்டிக் கொண்ட நிலையில், வீட்டில் பல கொடுமையை சந்தித்து வருகின்றார்.
மீனாவும் தனது தங்கையின் காதல் குறித்து முத்துவிடம் பேசும் நிலையில், அது சண்டையில் முடிவடைகின்றது. இதனால் முத்து தற்போது மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
தற்போது விஜயாவைப் பார்த்து பாசத்துடன் விஜயாவிடம் முத்து பேசியுள்ள நிலையில், முத்துவின் பாசத்தை அவதானித்த விஜயா கண்கலங்கிய நிலையில் நிற்கின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |