Siragadikka Aasai: மீண்டும் முத்துவிடம் மோதும் போலிஸ்... சீதா செய்யும் உதவி
சிறகடிக்க ஆசை சீரியலில் ட்ராபிக் போலிசாக வந்த நபரின் தாயை சீதா மருத்துவமனையில் கவனித்து வரும் நிலையில், ஹோட்டலில் முத்துவிற்கும், அவருக்கும் பிரச்சனை எழுந்துள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகும். முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
பல தடைகளை தாண்டி குடும்பத்தின் ஒற்றுமை பாதிக்காமல், தனது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது ஸ்ருதி மற்றும் ரவி திருமணமான நாளை கொண்டாடுவதற்கு முத்து மீனா உதவி செய்ததால், ஸ்ருதி மீனாவிற்கு புதிய ஸ்மார்ட்போன் ஒன்றினை வாங்கி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ட்ராபிக் போலிஸ் முத்துவிடம் மீண்டும் வம்பிழுத்துள்ளார். ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
ஒரு பக்கம் சிட்டி முத்து மீது வன்மத்தை வளர்த்து வரும் நிலையில், தற்போது போலிசாரால் முத்துவிற்கு என்ன பிரச்சனை எழும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |