Siragadikka Aasai: கறிக்கடை மாமா மீனாவிடம் சிக்குவாரா? தோழிகளால் நடக்கும் சம்பவம்
சிறகடிக்க ஆசை சீரியலில் கறிக்கடைகாரராக அறியப்பட்ட மலேசியா மாமா மீனாவின் தோழிகளிடம் சிக்கியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து வாழ்க்கையை கொண்டு செல்லும் மீனாவை மாமியார் கொடுமை செய்கின்றார். ஆனால் கணவர் முத்து மீனாவிற்கு ஆறுதலாக இருந்து வருகின்றார்.
மீனாவை தொழிலில் இருந்து விரட்டுவதற்கு சிந்தாமணி பல சதிகளை செய்துவரும் நிலையில், மீனா அதை அனைத்தையும் சாமர்த்தியமாக கடந்து வருகின்றார்.
தற்போது அண்ணாமலை நண்பர் வீட்டு திருமணத்தில் குடும்பமாக கலந்து கொண்டுள்ளனர். மீனாவின் தோழிகளுக்கு மலேசியா மாமா கறிக்கடைக்காரராக தெரிந்துள்ள நிலையில், திருமண வீட்டில் அவர்களை சந்தித்துள்ளார்.
பரசுவின் நண்பர் அண்ணாமலை என்பது தெரியாமல் மலேசியா மாமா திருமண மண்டபத்தில் அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்து வருகின்றார். ஆனால் இந்த முறையும் ரோகினி தப்பித்துக் கொள்வார் என்று பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
