Siragadikka Aasai: உண்மையைக் கண்டுபிடித்த மீனா... போலிசாரிடம் சிங்கப்பெண்ணாக மாறிய தருணம்
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா தனது கணவரைக் காப்பாற்ற போலிசாரிடம் சிங்கப்பெண்ணாக மாறியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
ரோகினி கூறிய பொய்யில் மலேசியா மாமா குறித்த உண்மை அம்பலமாகிய நிலையில், விஜயா ரோகினியை மனோஜிடம் இருந்து பிரிப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.
சிட்டியுடன் கூட்டணி சேர்ந்து ரோகினி திட்டமிட்ட நிலையில், இதனால் முத்து போலிசாரிடம் மாட்டிக் கொண்டுள்ளார்.
முத்துவின் காரையும், ஓட்டுனர் உரிமத்தையும் மீட்பதற்கு மீனா பல வழிகளில் முயற்சித்து வருகின்றார். கடைசியாக முத்துவின் காரை எடுத்துச் சென்ற போலிஸ் கான்ஸ்டபிளிடம் தனது வேதனைக் கூறி கதறுகின்றார்.
அவரும் மீனாவிற்காக உண்மையைக் கூற தயாரான நிலையில், சீதாவின் காதலர் உண்மையை சொல்லவிடாமல் கண் ஜாடை காட்டி வருகின்றார்.
உண்மையிலேயே குறித்த போலிசார் உண்மையை கூறுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |