Siragadikka Aasai: சத்யாவிற்கு போதை ஊசி.... சிட்டியிடமிருந்து காப்பாற்றுவாரா முத்து?
சிறகடிக்க ஆசை சீரியலில் சத்யா சிட்டியின் பிடியில் உள்ள நிலையில், அவனுக்கு போதை ஊசி போடுவதற்கு கட்டி வைத்துள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
ரோகினி தனது வாழ்க்கையில் நடந்த உண்மையை மறைத்து வாழ்ந்து வந்த நிலையில், சமீபத்தில் மலேசியா மாமா உண்மை பூதாகரமாக வெடித்துள்ளது.
பணக்கார மருமகள் என்று ரோகினியை கொண்டாடி வந்த விஜயா, தற்போது பயங்கரமாக கொடுமைபடுத்துகின்றார். ரோகினியின் சம்பளத்தையும் கொடுக்காமல் ஏடிஎம் கார்டையே வாங்கி வைத்துள்ளார்.
மீனா தனது பைக்கில் மூன்று பேர் வந்ததால், சீதாவின் காதலரான போலிசாரிடம் மாட்டிக் கொள்கின்றார். பின்பு அதற்கான அபராதத்தை கட்டியுள்ளார்.
மற்றொரு புறம் சிட்டி சத்யாவைப் பிடித்து வைத்துக் கொண்டு அவருக்கு போதை ஊசி போடுவதற்கு தயாராகியுள்ளார். அவரை காப்பாற்ற முத்துவும் தனது நண்பருடன் வருகின்றார்.
இறுதியில் சத்யாவை சிட்டி பிடியிலிருந்து காப்பாற்றுவாரா முத்து என்ற கேள்வி பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |