Siragadikka Aasai: மனோஜை நினைத்து கலங்கும் அண்ணாமலை! எடுக்கப்போகும் முடிவு என்ன?
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் குடித்துவிட்டு ரகளை செய்ததால் போலிசாரிடம் மாட்டிக் கொண்ட நிலையில், அண்ணாமலை மிகவும் மனம் கஷ்டப்பட்டுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
ரோகினி தனது வாழ்க்கையில் நடந்த உண்மையை மறைந்து வாழ்ந்து வந்த நிலையில், மலேசியா மாமா குறித்த உண்மை அனைவருக்கும் தெரியவந்துள்ளது.
இந்த உண்மையால் கொதித்தெழுந்த விஜயா ரோகினியை அடித்து வெளியே துரத்தியுள்ளார். ரோகினி ஏமாற்றிய சோகத்தை தாங்க முடியாத மனோஜ் குடித்துவிட்டு போலிசிடம் தகராறு செய்துள்ளார்.
காவல்நிலையத்தில் மனோஜின் நிலை கண்ட அண்ணாமலை கண்கலங்கியுள்ளார். மேலும் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு எடுக்கப் போவதாக மீனா, முத்துவிடம் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |