Singappenne: மகேஷிடம் கொத்தாக மாட்டிக்கொண்ட அன்பு, ஆனந்தி... உண்மை அம்பலமாகுமா?
சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு ஆனந்தி இருவரும் மருத்துவமனையில் இருக்கும் பொழுது மகேஷ் அவர்களை பார்த்துள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் சிங்கப்பெண்ணே சீரியல், டி ஆர் பி-யில் முதல் இடத்தில் இருந்து வருகின்றது.
கிராமத்து பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், தனது குடும்பத்திற்காக சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ் ஒன்றில் வேலை செய்கின்றார் ஆனந்தி.
ஆனந்தி தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், இதற்கு காரணம் யார் என்று தெரியாமல், அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
ஆனந்தியின் கர்ப்பத்தை அறிந்த அன்பு அவரை பத்திரமாக பார்த்து வருகின்றார். ஆனால் மகேஷிற்கு இந்த விடயம் தெரியாமல் உள்ளது. தற்போது மருத்துவமனைக்கு வந்தவர்கள் மகேஷிடம் மாட்டிக் கொள்கின்றனர்.
மகேஷிற்கு உண்மை தெரியுமா? அல்லது மகேஷ் தான் தனது கர்ப்பத்திற்கு காரணம் என்று ஆனந்திக்கு தெரியவருமா? என்ற கேள்வி பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |