Singappenne: அடுத்தடுத்து சறுக்கலை சந்திக்கும் ஆனந்தி... வலியால் துடிக்கும் கொடுமை
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்திக்கு திடீரென வயிறுவலி ஏற்பட்டுள்ள நிலையில், தோழிகள் பயத்தில் ஆழ்ந்ததுடன், வார்டன் உதவிக்கு வந்துள்ளார்.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் சிங்கப்பெண்ணே சீரியல், டி ஆர் பி-யில் முதல் இடத்தில் இருந்து வருகின்றது.
கிராமத்து பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், தனது குடும்பத்திற்காக சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ் ஒன்றில் வேலை செய்கின்றார் ஆனந்தி.
ஆனந்தி கதாபாத்தில் மனீஷா மகேஷ், மகேஷ் கதாபாத்திரத்தில் தர்ஷக் கவுடாவும், அன்பு கதாபாத்திரத்தில் அமல் ஜித் என இரண்டு ஹீரோக்கள் நடித்து வருகின்றனர்.
அன்பும், மகேஷும் ஆனந்தியை காதலித்து வந்த நிலையில், அன்புவை தான் ஆனந்தி காதலிக்கின்றார் என்று தெரிந்ததும், மகேஷ் விலகியுள்ளார்.
தற்போது ஆனந்தியின் கர்ப்பத்திற்கு காரணம் யார்? என்பதை கண்டறிய அனைவரும் முயற்சி செய்து வருகின்றனர். இதனால் ரகு வீட்டிற்கு சென்று அவரை பார்க்க சென்றுள்ளனர். ஆனால் அங்கு ரகு இல்லை.
இந்நிலையில் ஆனந்தியை அன்பு மிகவும் அன்பாகவும், கவனமாகவும் பார்த்துக் கொள்கின்றார். தற்போது ஆனந்திக்கு திடீரென வயிறுவலி ஏற்பட்ட நிலையில், வார்டன் ஆனந்திக்கு உதவி செய்வதற்கு வந்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |