singapenne: கருணாகரனுக்கு தெரிந்த உண்மை.. பதற்றத்தில் ஆனந்தி -அன்பு
பார்ட்டில் வைத்து நடந்த சம்பவத்தை கருணாகரன் வெளியில் கூற ஆரம்பிக்க, அன்புவை வீட்டிற்கு செல்லுமாறு ஆனந்தி உஷாராக்குகிறார்.
சிங்கப்பெண்ணே
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. அன்பு மற்றும் மகேஷ் இருவரும் ஆனந்தியை காதலித்து வருகின்றனர்.
இவர்களில் ஆனந்தி, அன்புவை காதலிக்கிறார். இந்த விடயம் தெரிந்து கொண்ட மகேஷ் ஒதுங்கி போயுள்ளார். இந்த நிலையில் ஆனந்தியின் கர்ப்பம் அவரது அக்கா திருமணத்தின் போது கிராமத்தில் அனைவருக்கும் தெரிந்து விடுகிறது.
தற்போது ஆனந்தி வேலைச் செய்யும் இடத்திலுள்ள அனைவருக்கும் தெரிந்து விட்டது. ஆனாலும் ஆனந்தி மீது தவறு இருக்காது என தெரிந்து அங்குள்ளவர்கள் ஆறுதலாக இருக்கிறார்கள்.
கர்ப்பத்திற்கு யார் காரணம் என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும் ஆனந்தி நண்பனை வைத்து ரகுவை பிடித்து விடலாம் என முயற்சி செய்த போது மித்ரா நடுவில் வந்து அனைத்தையும் மாற்றி விடுகிறார்.
ஆனந்திக்கு எதிராக நிற்கும் கருணாகரன்
இந்த நிலையில், அன்புக்கும் துளசிக்கும் திருமணம் பேசி முடிவாகி அதன் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இதனால் மனம் உடைந்து போன ஆனந்தி அவரின் வாழ்க்கையில் அடுத்த என்ன நடக்கும் என தெரியாமல் தவிப்பில் இருக்கிறார்.
இது ஒரு புறம் சென்றுக் கொண்டிருக்கையில், ஆனந்தி, அன்பு உட்பட ஆனந்தியுடன் வேலை செய்பவர்களை மகேஷ் பார்க் ஒன்றிற்கு அழைத்து செல்கிறார்.
அப்போது ராட்டினத்தில் ஏறிய ஆனந்திக்கு வாந்தி வருகிறது. மித்ராவிடம் இருந்து ஆனந்தி பற்றிய உண்மையை தெரிந்து கொண்ட கருணாகரன் அதனை வெளியில் கூற ஆரம்பிக்கிறார்.
ஆனந்தி வயிற்றில் உள்ளது தன்னுடைய குழந்தை தான் என அறியாத மகேஷ் அன்புவை தான் தேடிவருவார் எனக் கூறி ஆனந்தி அன்புவை வீட்டுக்கு செல்லுமாறு கூறுகிறார்.
இந்த பிரச்சினை எப்படி வெடிக்கப்போகிறது என்பதை காண சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாத கருணாகரன் ஆனந்தி வாழ்க்கையில் விளையாடப்போகிறாரா? என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |