Singappenne: அன்பு- துளசிக்கு நடுவில் வந்த மகேஷ்.. வாயடைத்து போன குடும்பம்- இனி திருமணம் நடக்குமா?
சிங்கபெண்ணே சீரியலில் துளசி- அன்பு நிச்சயதார்த்தம் நடக்கவுள்ள நிலையில், அதனை தடுப்பதற்காகவே மகேஷ் வீட்டிற்கு நுழைகிறார்.
சிங்கப்பெண்ணே
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.
அன்பு மற்றும் மகேஷ் இருவரும் ஆனந்தியை காதலித்து வருகின்றனர். இவர்களில் ஆனந்தி, அன்புவை காதலிக்கிறார். இந்த விடயம் தெரிந்து கொண்ட மகேஷ் ஒதுங்கி போயுள்ளார்.
இந்த நிலையில் ஆனந்தியின் கர்ப்பம் அவரது அக்கா திருமணத்தின் போது கிராமத்தில் அனைவருக்கும் தெரிந்து விடுகிறது. தற்போது ஆனந்தி வேலைச் செய்யும் இடத்திலுள்ள அனைவருக்கும் தெரிந்து விட்டது. ஆனாலும் ஆனந்தி மீது தவறு இருக்காது என தெரிந்து அங்குள்ளவர்கள் ஆறுதலாக இருக்கிறார்கள்.
கர்ப்பத்திற்கு யார் காரணம் என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும் ஆனந்தி நண்பனை வைத்து ரகுவை பிடித்து விடலாம் என முயற்சி செய்த போது மித்ரா நடுவில் வந்து அனைத்தையும் மாற்றி விடுகிறார்.
துளசியை திருமணம் செய்யும் அன்பு
இந்த நிலையில், அன்புக்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என முயற்சி செய்த அவருடைய அம்மாவை அன்பு கடுமையாக திட்டி விடுகிறார். இதனால் மனம் உடைந்து போன அவருடைய அம்மா வீட்டை விட்டு வெளியேறி ஒரு நாடகத்தை போட்டு துளசியை திருமணம் செய்ய ஒப்புக் கொள்ள வைக்கிறார்.
இந்த விடயம் தெரியாமல் ஆனந்தியும், “அன்புவை துளசிக்கு திருமணம் வைத்துக் கொடுங்கள்“ என கூறி விட்டு தனியாத ரோட்டில் நடந்துசெல்லும் பொழுது நடுவில் மகேஷ் வருகிறார். அதன் பின்னர், துளசி- அன்பு நிச்சயதார்த்த ஆயத்தங்கள் நடந்து கொண்டிருக்கும் பொழுது நடுவில் மகேஷ் வருவது போன்று காட்சிகள் காட்டப்படுகிறது.
இதற்கிடையில் துளசியின் நாடகத்தை அன்புவின் தங்கை கண்டுபிடிக்கிறார். “தன்னை தாண்டி எப்படி அண்ணா திருமணம் நடக்கும் என்பதையும் பார்க்கலாம்” என கூறுகிறார். இவர்களின் திருமணம் நடக்குமா? ஆனந்தி- அன்பு காதல் கைசேருமா? என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |