அமைதியான சிறுநீரக சிதைவு - உலகளவில் 800 மில்லியன் மக்கள் பாதிப்பு... என்ன செய்யலாம்?
தற்போது சிறுநீரகங்கள் அமைதியாக சிதைவடைவதால் பல மில்லியன் கணக்கான மக்கள் அதன் பாதிப்பு தெரியாமலே இறந்து விடுகின்றனர்.
அமைதியான சிறுநீரக சிதைவு
சிறுநீரகம் சிதைவடைந்தால் அது எந்த விதமான அறிகுறிகளையும் காட்டி வராது. அது நமக்கே தெரியாமல் நம்மை உள்ளிருந்து சேதப்படுத்துவதால் நிபுணர்கள் இதை அமைதியான சிறுநீரக நோய் என கூறுகிறார்கள்.
இது வேலை, குடும்பம், மன அழுத்தம், ஹார்மோன்கள் மற்றும் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகும் உடல்நல மாற்றங்களால் பெரும்பாலும் பெண்களுக்குகு வருவது.
சிறுநிரகங்கள் நமது உடலுக்கு மிகவும் முக்கியமாகும். என்னதான் சிறுநீரகம் சிதைவடைந்து அழுத்ததில் இருந்தாலும் அவை கழிவுகளை வடிகட்டி, திரவங்களை சமநிலைப்படுத்தி, இரத்த அழுத்தத்தை சிராக்கி வேலை செய்து கொண்டு தான் இருக்கும்.

இப்படி உடலில் எல்லாம் சரியாக நடக்கும் போது நாமும் எல்லாம் நன்றாக நடக்கிறது என நினைத்து உடலை ஒழுங்காக கவனிப்பதில்லை.
இது நாளாக நாளாக சிறுநீரக்கள் பலவினமடைந்து அது நம் உடலுக்கு சில அறிகுறிகளை கொடுக்கும். நீங்கள் சோர்வாக உணரலாம் அல்லது வீக்கத்தைக் கவனித்து அது ஹார்மோன் சார்ந்தது என்று கருதலாம்.
அல்லது அடிக்கடி சிறுநீர் கழிப்பதை அலட்சியமாக விடலாம் இதுபோல பல விடயங்களை நீங்கள் செய்யும் போது சிறுநீரக செயல்பாடு அமைதியாகக் குறைந்து கொண்டிருக்கலாம்.
அதன்படி நமக்கு வரும் அறிகுறிகளில் ஏற்படும் தாமதமே சிறுநீரக நோய் பெரும்பாலும் தாமதமாகக் கண்டறியப்படுவதற்கு மிகப்பெரிய காரணமாகும்.

40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஏன் அதிக ஆபத்தை எதிர்கொள்கிறார்கள்?
40 வயதிற்குப் பிறகு, ஒரு பெண்ணின் உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஹார்மோன்கள் ஏற்ற இறக்கங்களுக்கு ஆளாகின்றன.இரத்த அழுத்தம் வேகமாக அதிகரிக்கும்.
இரத்த சர்க்கரை அளவுகள் முன்பு போல் செயல்படாமல் போகலாம்.
பெண்கள் ஆட்டோ இம்யூன் கோளாறுகள், மீண்டும் மீண்டும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் இரத்த சோகை போன்ற நிலைமைகளை அனுபவிக்கும் வாய்ப்புகள் அதிகம், இவை அனைத்தும் காலப்போக்கில் சிறுநீரகங்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கும்.

பல ஆண்டுகளாக சிகிச்சையளிக்கப்படாத உயர் இரத்த அழுத்தம் அல்லது எல்லைக்கோட்டு நீரிழிவு நோய் சேர்க்கப்பட்டால், ஆபத்து அமைதியாக அதிகரிக்கிறது.
இங்கேதான் தந்திரமான பகுதி இருக்கிறது. பெண்கள் பெரும்பாலும் தங்கள் உடல்நலத்தை இரண்டாவது இடத்தில் வைக்கிறார்கள். குடும்பங்கள் முதலில் வருகின்றன.
வேலைக்கான காலக்கெடு முதலில் வருகிறது. பெற்றோர், குழந்தைகள், மற்ற அனைவரும் முதலில் வருகிறார்கள். வழக்கமான சோதனைகள் ஒத்திவைக்கப்படுகின்றன.

லேசான அறிகுறிகள் புறக்கணிக்கப்படுகின்றன. அந்த தாமதம் சிறுநீரகத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்கும். எனவே 40 வயதை கடந்த பெண்கள் அவாகள் ஆரோக்கியத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |